Sunday, May 31, 2009

e-book (DjVu) உருவாக்குவது எப்படி?

கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு, ஒரு புத்தகத்தை Scan செய்து, அதை எவ்வாறு DjVu மின்புத்தகமாக மாற்றுவது என்றுபார்ப்போம்.

DjVu - pdfக்கான Open Source மாற்று என்று கூறப்படுகிறது. http://djvu.org/

DjVu கோப்புகளை உருவாக்க நாம் பயன்படுத்தப்போகும் டூல்கள் (எல்லாமே Open Source/Free Software)-

  1. DjVu Libre - Command-line tools, (Windows/Linux)
  2. ImageMagick, தேவைப்பட்டால், tiff/png இதர கோப்புகளை DjVu Libre ஏற்றுக்கொள்ளும் வடிவத்திற்கு மாற்ற. (Windows/Linux)
இவை இரண்டே போதும். மேலும் சில toolகள், நம் வசதிக்காக.
  1. Scan Tailor, தேவைப்பட்டால், scan செய்த பக்கங்களை நறுக்கி, நிமிர்த்தி சுத்தம்செய்ய. (Windows/Linux)
  2. gscan2pdf - linuxல் மட்டும், DjVu Libre CLIக்கு பதில் GUI.
ஒரு புத்தகம் அல்லது சில பக்கங்களை Scan செய்கிறோம். பின்பு அவற்றை சேர்த்து DjVu கோப்பாக மாற்ற கீழ்கண்ட வழிமுறைகளில் ஒன்றை பின்பற்றப் போகிறோம்.

வழிமுறை 1: லினக்ஸில் gscan2pdfஐப்பயன்படுத்தி GUI மூலமாக
  1. (optional) Scan Tailorஐ வைத்து தேவையில்லாத கறுப்புப்பகுதிகளை நீக்கி, நேர் செய்து Tiff கோப்புகளை மேம்படுத்திவைத்துக் கொள்கிறோம்.
  2. gscan2pdfல் அந்த tiff படங்களைத் திறந்து File->Save as... DjVu :)
gscan2pdfஇலேயே பக்கங்களை scan செய்யவும், நறுக்கி சீரமைக்கவும் வசதிகள் உண்டு. ஆனால் நான் பயன்படுத்திப் பார்த்ததில் அவை சரியாக வேலை செய்யவில்லை. ஸ்கேன்-டெய்லர் இந்த வேலைகளை சிறப்பாகச் செய்கிறது.

வழிமுறை 2: லினக்ஸ் அல்லது விண்டோஸில், DjVu Libre கட்டளைகள் மூலம்
  1. புத்தகத்தை ஸ்கேன் செய்து கொள்கிறோம். வழக்கம்போல Scan Tailorஐ வைத்து தேவையில்லாத கறுப்புப்பகுதிகளை நீக்கி, நேர் செய்து Tiff கோப்புகளை மேம்படுத்திவைத்துக் கொள்கிறோம்.
  2. கறுப்பு-வெள்ளை tiffகளை (Bi-Tonal Tiff) அப்படியே பயன்படுத்தலாம். வண்ணப் பக்கங்கள் இருந்தால் அவற்றை இமேஜ்-மேஜிக்-ஐக் கொண்டு NetPBM வடிவத்துக்கு மாற்றிக் கொள்கிறோம்(ppm - colour, pgm - grayscale)
  3. tiff/ppm/pgm -> தனித்தனி DjVu பக்கங்கள்.
  4. தனித்தனிப் பக்கங்களை இணைத்து ஒரே DjVu கோப்பு.

விரிவாகப்பார்ப்போம்.

வழிமுறை 1ல்
பெரிதாக ஒன்றும் இல்லை. gscan2pdfல் (மட்டமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் நல்ல டூல்) பக்கங்களைத் திறந்து சேமிக்க வேண்டியது தான்.

இரு வழிமுறைகளிலும் பொதுவாக இருப்பது ஸ்கேன்-டெய்லர்.

இந்த ஸ்கேன்-டெய்லரை வைத்து, பக்கங்களை நேராக்கலாம், புத்தகத்தை விரித்து வைத்து இடது-வலது பக்கங்கள் ஒரே படத்தில் வரும்படி ஸ்கேன் செய்திருந்தால் அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்கலாம், முழுப் பக்கத்தில் எழுத்துக்கள் உள்ள பகுதியை மட்டும்வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கலாம். எல்லாவற்றையும் நாமாக manualஆகச் செய்யத்தேவையில்லை. Batch-modeல் அதே தானாக எல்லா பக்கங்களையும் திருத்தும், தேவைப்பட்டால் நாம் மேற்படி சரிசெய்யலாம்.

ஸ்கேன்-டெய்லர் விண்டோஸில் இருக்கு. உபுண்டு ரெப்பாஸிட்டரிகளில் இல்லை, நான் கம்பைல் செய்துகொண்டேன்.

வழிமுறை 2

படி1: ஸ்கேன்-டெய்லர்

மேலே குறிப்பிட்டது. பக்கங்களை சுத்தம் செய்து வைத்துக்கொள்வது.

படி 2: Tiffஐ NetPbmஆக மாற்றுதல்


முன்பே சொன்னதுபோல பக்கங்கள் bi-tonal tiffஆக இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். வண்ணப்பக்கங்களை ppm ஆகா மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தை கருப்பு-வெள்ளையாக ஸ்கேன் செய்து வைத்திருக்கிறோம், அட்டைப்படம் மட்டும் கலரில் என்று வைத்துக் கொள்வோம். அட்டைப் படத்தை ppmஆக மாற்ற ImageMagickன் கட்டளைகளை -
$ convert page0001.tiff page0001.ppm
அவ்வளவுதான். (விண்டோஸிலும் இதேதான். கட்டளையை எங்கிருந்துகொடுக்கிறோம், tiff படம் எங்கே இருக்கிறது போன்றவற்றை, path விஷயங்கள், கவனித்துக் கொள்ள வேண்டும்)

மற்ற பக்கங்கள் tiffஆக இல்லாமல் pngஆகவோ, jpeg ஆகவோ இருந்தால் அவற்றையும் NetPbmஆக மாற்றிக் கொள்வது நல்லது.
$ convert page0002.png page0002.pbm
குறிப்பு: Netpbm formats: ppm - colour, pgm - grayscale, pbm - monochrome

படி 3: பக்கங்களை தனித்தனியாக DjVu கோப்பாக மாற்றிக்கொள்வது

இதற்கு DjVu Libreவில் உள்ள கட்டளைகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
f:\djvu\> c44 page0001.ppm page0001.djvu

(c44 - போட்டோக்கள், வண்ணப்பக்கங்கள் - முதல்பக்கம், இவற்றிற்கு)
f:\djvu\> cpaldjvu page0002.ppm page0002.djvu

(cpaldjvu - சில வண்ணங்கள் மட்டும் உள்ள பக்கங்களுக்கு - எ.கா. Screenshots)
f:\djvu\> cjb2 page0003.tiff page0003.djvu
(cjb2 - கறுப்பு-வெள்ளைப் பக்கங்களுக்கு. Bitonal tiff / pbm files)

படி 4: அனைத்து DjVu கோப்புகளையும் இணைத்து மின்புத்தகமாக்குவது

இதற்கும் DjVu Libreவின் கட்டளை ஒன்றைப் பயன்படுத்துவோம்.
f:\djvu\> djvm -c myebook.djvu page0001.djvu page0002.djvu page003.djvu
இந்தக் கட்டளையைப் பிறப்பித்தவுடன் மேற்குறிப்பிட்ட மூன்று பக்கங்களும் இணைந்து myebook.djvu என்ற மின்புத்தகம் கிடைக்கும்.

இந்த மின்புத்தகத்தில் புதிதாக ஒருபக்கத்தை இணைக்க
f:\djvu\> djvm -i myebook.djvu page0004.djvu 4

கடைசியில் சொன்ன 4 - பக்கம் எண். கீழே உள்ள கட்டளை புத்தகத்திலிருந்து 2ஆவது பக்கத்தை நீக்கும்.
f:\djvu\> djvm -d myebook.djvu 2

~~~~~~

பி.கு.கள்

  • நான்கைந்து பக்கங்களுக்கு மேல் இருந்தால் Script/batch file எதாவது எழுதி வைத்துக் கொள்வது உத்தமம். page0001.djvu page0002.djvu ...... என நூற்றுக்கணக்கான பக்கங்களை command-lineல் கொடுக்க சில சுருக்குவழிகள் இருக்கின்றன. தேடிப்பாருங்கள்.

  • DjVuக்கு இலவசமாக நிறைய viewers, browser-plugins இருக்கின்றன. நல்ல editorகள் நான் தேடியவரை கிடைக்கவில்லை (gscan2pdf தவிற). உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.

  • நாம் மேலே உருவாக்கியது bundled djvu கோப்பு. அதாவது அதன் பக்கங்கள் அனைத்தும் அதற்குள் அடக்கம். Indirect file என்று ஒருவகை உண்டு. அதாவது myebook.djvuக்குள் வெறும் லின்க்குகள் மட்டும் இருக்கும். பக்கங்கள் வெளியே தனித்தனியாக இருக்கும். djvmcvt ஐ வைத்து ஒரு bundled documentஐ, Indirect documentஆக மாற்றலாம். ஆனால் உருவாக்கும்போதே தனித்தனியான djvu பக்கங்களை வைத்து Indirect DjVu புத்தகமாக எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

Friday, May 22, 2009

இட்லி தோசை

மயக்கம் லேசாகத் தெளிந்தது. கண்களை இன்னும் திறக்கவில்லை. ஆனால் அம்மா, அப்பா, அண்ணன் அருகில் இருப்பது தெரிந்தது.

"தோசை வேணும்ப்பா"

"இங்க தோசையெல்லாம் கிடைக்காது குட்டி"

"வெங்கடேஸ்வரா சைவ உணவகம்ன்னு போட்டிருக்கே. அண்ணன் கூட ஒரு தோசை 3 சட்டினி சாப்பிட்டானே, எனக்கும் ஒரு தோசை வாங்கிக்கொடுப்பா"

வெங்கடேஸ்வரா... என போர்டு மங்கலாகத் தெரிவது போல் இருந்தது.
"வெங்கடேஸ்வரா சைவ உணவகம் இல்லைடா கண்ணு, மருத்துவமனை. நீ டாக்டரைக்கூடப் பார்த்தயே"

அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி கொடுப்பதற்காக காலையிலிருந்தே பட்டினி போட்டுவிட்டார்கள். அண்ணன் ஹோட்டலில் தோசை தின்றபோது பசியும் ஆசையுமாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

டாக்டர் மயக்க ஊசி போடும்போது என் கவனத்தை திசை திருப்ப 1, 2, 3 எண்ணச்சொன்னார். தோசை கிடைக்காத வெறுப்போடு இதுவும் நினைவுக்கு வந்தது.
"ஆமாம், என்னை இந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தீங்க பாரு, இவருக்கு சரியா ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியலை." அதற்குள் இன்னும் கொஞ்சம் தெளிய, வலி, ஊசி, மறுபடி மயக்கம்.


~*~

இட்லி, தோசை - இதெல்லாம் சாதாரண மக்களின் சாதாரண உணவா இல்லை கொஞ்சம் luxury ஆன விஷயங்களா என்பதில் எனக்குக் கொஞ்சம் குழப்பம். பாட்டி பழைய சாதம் உடம்புக்கு நல்லது என்று சொல்லுவாள். எங்கள் வீட்டில் பழையது எல்லாம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் இட்லி தோசையெல்லாம் அடிக்கடி கிடையாது.

தாத்தா தெவசத்தின் போது காலையிலிருந்து பட்டினி கிடக்க வேண்டியிருப்பதால் அத்தை ரகசியமாக காசு கொடுத்து யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தி கடையில் போய் இட்டிலி வாங்கிச் சாப்பிடச்சொல்வாள். பாப்பாத்தி கடையில் சாப்பிடுவது மிகப்பெரிய குற்றம். அங்கே முட்டையெல்லாம் வைத்திருப்பாள். தோசை ஊற்றும் அதேகல்லில் முட்டையையும் உடைத்து ஊற்றுவதை நானே பார்த்திருக்கிறேன். பாப்பாத்தி கடையில் இட்லி தோசைகள் வீட்டில் செய்வது போல் இல்லாமல் வேறு ஒரு விதமான வாசனை, சுவையுடன் இருக்கும். எப்போதோ கிடைக்கும் திருட்டு சுகம்.

அப்பாவுடன் எப்போதாவது சாயங்கலவேளை சைக்கிளில் டவுன் வரை போய் வருவோம். அண்ணன் பின்னால் கேரியரில் உட்கார்வான். எனக்கு முன்பாக பாரில் ஒரு குட்டி சீட்டும், கீழே கம்பியில் ஒரு கால் பிடியும் இருக்கும். ஹோட்டலில் வடை, தோசை எதாவது சாப்பிடுவோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்பா "வீட்டில் சாப்பிடுவது போல் வராது" என்பார். எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக ஹோட்டல் கடை சாம்பார் தூக்கலாக இருக்கும்.

பிற்பாடு அம்மா வேலைக்குப் போக ஆரம்பித்ததால் சில சமயம் சமையல் செய்ய நேரம் இருக்காது. அப்போதெல்லாம் சாதம் மட்டும் வடித்துவிட்டு காசினோ ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு சாம்பார் மட்டும் வாங்கி வரச்சொல்லுவாள். மாங்கய் சொம்பில் முக்கால் வாசிக்கு மேல் ஊற்றி ஒரு காகிதம் போட்டு மூடிக் கொடுப்பான். சிந்தாமல் தூக்கிவர வேண்டும். கை சுடும்.

பிற்பாடு காசினோ ஓட்டலை மூடிவிட்டார்கள். கீதா கபேவையும் இடித்து வேறு கடை கண்ணிகள் கட்டி விட்டார்கள். ஆரியபவன் பக்கத்தில் புதிதாக ஒரு ஓட்டல் வந்தபின் ஆரியபவனில் கூட வியாபாரம் படுத்துவிட்டது. புது ஓட்டலில் குஷ்பு இட்டிலி போட்டார்கள். தோசைக்குத் தொட்டுக்கொள்ள 7 வித சட்டினி கொடுத்தார்கள். ஓட்டல் பளிச்சென்று இருக்கும். சுவற்றில் பெரிய பெரிய சாமி படங்கள் மாட்டியிருக்கும். ஆரியபவன் தூங்கிவழிந்தது. என் மாமா போன்ற பழைய கட்டைகள் மட்டும் தொடர்ந்து வரும். நானும் எப்போதாவது ஊருக்குப் போனால் ஆரியபவனில் டிபன் சாப்பிடுவேன். அப்பா சொன்னது சரிதான், வீட்டு சாப்பாடு போல வராது.

~*~

பணத்துக்கு ரொம்ப கஷ்டமான காலத்தில் அம்மா இட்லி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள். நானும் அம்மாவும் சேர்ந்து பிழக்கடையில் ஆட்டங்கல்லில் மாவு அரைப்போம். அடுத்த வீதியில் ரெண்டு ரூபாய்க்கு கிரைண்டரில் அரைத்துத் தருவார்கள். ஆனால் மாவு எடுத்துக்கொள்வார்களாம்.

காலையில் இட்லி சுட்டதும் பக்கத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டுபோய் விற்று வருவேன். வீட்டில் பெரிய பெரிய பேங்க் ஆபீசர்கள் வாசலில் ஷூக்களைக் கழற்றிவிட்டு வந்து பாயில் காலை மடக்கி உட்கார்ந்து இட்லி சாப்பிடுவதைப் பார்த்தால் சிரிப்பாக வரும்.
கேஸ் அடுப்பு, நான்ஸ்டிக் தோசைக்கல், பிரஷர் குக்கரில் இட்லித்தட்டுகள், ரெட்மேட் மாவுப் பாக்கெட்கள் எல்லாம் வந்த பின் இட்லி-தோசையின் வாசனை, சுவைகள் மாறிவிட்டன.

என்ன இருந்தாலும் இட்லி தோசைன்னா நம்ம ஊர்தான் சார். இந்த ஊர் உடுப்பி ஹோட்டல் எல்லாம் நமக்குப் பிடிக்காது. சாம்பார்ன்னு எதோ சிவப்பு நிறத்தில் பருப்பில்லாமல் சர்க்கரை போட்டுக் கொண்டு வரான். ரவா இட்லியும் நமக்கு ஆகாது. கொழுக்கு மொழுக்குன்னு உளுந்து இட்லின்னாதான் பிடிக்கும். தோசை கூட ஒரு மாதிரி நிறைய எண்ணை ஊற்றி செய்யறாங்க. சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை வருது. ஜிண்ட்டாக் போட்டுக்க வேண்டியிருக்கு. ஏதோ ஹெல்த்தியா சாப்பிட்ட feelஏ இல்லை.
இதனாலோ என்னமோ வரவர இட்லி தோசைன்னாவே அவ்வளவா பிடிப்பதில்லை. சின்ன வயதில் ஆசை அசையாய்த் தேடித் தின்றவற்றை மனம் தேடுகிறது, நாக்குக்கு அந்த ருசி தெரியவில்லை.

~*~

எதோ ஸ்டேஷனில் ரயிலுடன் என் எண்ண ஓட்டமும் நின்றது. 8 மணி. சாப்பிட்டுப் படுக்க வேண்டும். அம்மா மூணு இட்லி மிளகாய்ப்பொடியில் துவைத்து கூடக்கொஞ்சம் தயிர் சாதமும் கட்டிக் கொடுத்திருக்கா. ஊர் வந்து சேர்ந்ததும் முதல்வேலையா நம்மூர் ஹோட்டல் இட்லி-சாம்பார் பதம் பார்க்கணும்.

ஆனந்த்
மே 5, 2009

Monday, February 23, 2009

A R Rahman: 2 Oscars, 1 BAFTA, 1 Golden Globe

He actually did it! Two Oscars! One for the best original score, and one for the best song.

I haven't seen the movie yet. I guess the score should be good , he usually does a good job there.

The song is ok, fun. Spicy Indian masala :) பொதுவாக இசை பற்றி இளையராஜாவிடம் கேட்டபோது "எல்லாம் ஏமாத்து வேலைதான்" எனச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

I'm a big fan of ARR. I've been longing to hear more from Rahman. Unfortunately I don't remember any mind-blowing album by him after Boys and Yuva, except few rare good songs here and there. Is this (Slumdog Millionaire) going to be one of his all time classics? I don't know, I've to give it a fair listen once.

These awards are important, for both ARR and his fans like me. He would feel more responsible now and we can expect some really good music him in the near future.

For those who are new to Rahman's music, try his earlier works, especially songs from movies directed by Mani Ratnam.

Saturday, February 14, 2009

Guitar Improvisation - Carnatic






A long guitar improvisation based on a carnatic raga.

Played and Recorded by : Ananth (myself)
Record on: Sep 17, 2008

Creative Commons License
2008-09-17 Guitar Improvisation - Carnatic by Ananth is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 2.5 India License.

Friday, September 26, 2008

New Track - Guitar Dreams

Just uploaded a new track, titled Guitar Dreams, to my Sellaband page. Hope you like it.

update: